மோட்டார் சைக்கிள் கடையில் தீப்பரவல்; மாற்றுத்திறனாளி ஒருவர் மரணம்

குருண்:

தாமான் ஸ்ரீ உத்தாமாவில் உள்ள மோட்டார் சைக்கிள் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் (OKU) இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

அதிகாலை 4.40 மணிக்கு தீ விபத்து குறித்து தமது துறைக்கு அழைப்பு வந்தது என்று கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் சியுஃபாத் கமரோன் கூறினார்.

உடனே குவார் செம்பெடாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு மற்றும் யான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழுவின் உதவியுடன் சிறிது நேரம் கழித்து அந்த இடத்திற்கு வந்தனர்.

இந்த நடவடிக்கைக்கு தன்னார்வ தீயணைப்புப் படையும் உதவியதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here