போதைப் பொருள் கும்பலை முறியடித்த மலாக்கா போலீசார்

தாமான் சாகா, மாலிம் என்ற இடத்தில் நடத்திய சோதனையில், மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்து RM650,369 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் போதைப்பொருள் கும்பலை மலாக்கா போலீசார் முடக்கியுள்ளனர்.

இரவு 8.15 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உள்ளூர் ஆடவரும் 25 முதல் 27 வயதுடைய இரண்டு தாய்லாந்து பெண்களும் என்று மாநில துணை போலீஸ் தலைவர் எஸ்ஏசி முகமட் நஸ்ரி நவாவி கூறினார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் திரவ கெத்தமைன் (279.84 லிட்டர்), எரிமின் 5 மாத்திரைகள் (0.551 கிலோ), எக்ஸ்டசி மாத்திரைகள் (0.26 கிலோ), கெட்டமைன் (6.734 கிலோ), கெத்தமைன் பவுடர் (5.25 கிலோ) மற்றும் எக்ஸ்டஸி பவுடர் (1.224 கிலோ) ஆகியவை அடங்கும்.

CZ 85 H 1 பிஸ்டல், ஒரு புரோட்டான் BLM கார், நகைகள் மற்றும் RM803 ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் சந்தேக நபர்களில் ஒருவரிடம் முந்தைய பதிவுகள் இருந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு எதிர்மறையாக சோதனை செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி வைத்திருந்ததற்காக அவர்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here