ஷா ஆலாம்:
நேற்றிரவு சுங்கை புவா மற்றும் சுங்கை செமினியில் துர்நாற்றம் கண்டறியப் பட்டதைத் தொடர்ந்து, சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (Luas) அதுதொடர்பில் விரிவான விசாரணையை செயல்படுத்தியுள்ளது.
நேற்றிரவு 8.30 மணியளவில் கண்டறியப்பட்ட இந்த நீர் மாசுபாடு தொடர்பில், அது அதன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த துர்நாற்றம் தொடர்பில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை கண்காணிக்கப்படுகிறது என அது தெரிவித்துள்ளது.