சரவாக் முன்னாள் ஆளுநர் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை -போலீஸ்

பெட்டாலிங் ஜெயா:

சரவாக்கின் முன்னாள் ஆளுநர் துன் அப்துல் தாயிப் மஹ்மூட் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்பதும் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியவில்லை என்றும் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையல்ல என்று தேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

அப்துல் தாயிப் இருக்கும் இடம் அவரது உடன்பிறப்புகளுக்கு தெரியும், அத்தோடு அவர் மருத்துவமனியில் சிகிச்சை பெற்ற நிலையிலேயே அவர் காணாமல்போனதாக கூறப்படுவதால், குறிப்பாக அவரது வழக்கறிஞர்கள், சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கும் தெரியும் என்று அவர் கூறினார்.

“இந்த விவகாரம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்களிடமிருந்து காவல்துறை ஊடக அறிக்கைகளைப் பெற்றுள்ளது, ஆனால் சரவாக் காவல்துறை ஆணையர், குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் மற்றும் ஐஜிபி ஆகியோரிடமிருந்து இதுவரை எந்த அறிக்கையையும் பெறவில்லை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here