கோலாலம்பூர்:
தீபகற்பத்தைத் தவிர, மத்திய மற்றும் தெற்கு சரவாக்கின் பல பகுதிகளில் இன்று பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் முதல் இந்த வானிலை ஏற்படும் என்றும், மாதிரிகளின் பகுப்பாய்வு அடிப்படையில் இந்த வானிலை அதிகாலை வரை நீடிக்கும் என்றும், அதன் தலைமை இயக்குநர் முஹமட் ஹெல்மி அப்துல்லா கூறினார்.
“இதற்கிடையில், தீபகற்பம் மற்றும் சபாவின் உட்புறம் மற்றும் மேற்குப் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை ஏற்பட வாய்ப்புள்ளது.
” தீபகற்பத்தின் வட மாநிலங்களில் 35 டிகிரி செல்சியஸை விட அதிகமான வெப்பநிலையுடன் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கிறது” என்று அவர் இன்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் புதுப்பித்த மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கவும், www.met.gov.my என்ற இணையதளத்தையும் MET மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தையும் பார்க்கவும், பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.









