படிவம் 2 மாணவி பாலியல் பலாத்காரம்; இடைநிலைப் பள்ளி ஆசிரியர் கைது

ஈப்போ:

படிவம் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதே நேரத்தில் குறித்த வழக்கைத் தீர்ப்பதற்காக அந்த ஆசிரியரை மிரட்டி பணம் பறித்ததாக சந்தேகிக்கப்படும் பாதிக்கப்பட்டவரின் தந்தையிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி, பிப்ரவரி 12 அன்று புகார் அளித்ததை அடுத்து, 59 வயதான ஆண் ஆசிரியர் தடுத்து வைக்கப்பட்டதாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி யஹாயா ஹாசன் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு டிசம்பர் முதல் கடந்த மாதம் வரை பாதிக்கப்பட்ட சிறுமி சந்தேக நபரால் ஐந்து முறை துன்புறுத்தப்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று, அவர் இன்று நடந்த காவல்துறை மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (A) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here