60 மணி நேரத்திற்கும் மேலாக அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் நின்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் பாதுகாப்பாக மீட்பு

கோத்தா கினாபாலு:

கிழக்கு கடற்கரை சண்டாக்கான் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் ஒருவர், தனது அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரையிலிருந்து 60 மணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டு கீழே இறங்க மறுத்தவர், இறுதியாக சமாதானப்படுத்தப்பட்டு, இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இரவு (பிப் 12) இரவு 10.58 மணி முதல், பிளாட் செஜாதி அபார்ட்மெண்டில் உள்ள மூன்று மாடிகள் கொண்ட பிளாக் D இன் உச்சியில் ஏறிய 39 வயது நபரை கீழே வரும்படி தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் முயன்றனர்.

இருப்பினும் இன்று வியாழன் (பிப்ரவரி 15) மதியம் 1.24 மணியளவிலேயே அந்த நபர் சமாதானமாகியதுடன், அவரை பாதுகாப்பாக தரையில் கொண்டு வர முடிந்தது என்று சண்டாக்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் செவரினஸ் சைன்குய் கூறினார்.

அந்த நபர் ஒரு கூர்மையான இரும்புப் பொருளையும், ஒரு தடியையும் வைத்திருந்தார், அதுவே மீட்புப் பணியை கடினமாக மாற்றியது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here