கடையின் கூரையில் வடிவேலு இறந்து கிடக்க கண்டெடுப்பு

அம்பாங்:

நேற்று (பிப். 16) இரவு 7.04 மணியளவில் தாமான் பண்டான் சஹாயாவிலுள்ள ஒரு கடையின் கூரையில் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இறந்தவர் 71 வயதான பி. வடிவேலு என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதாகவும், வடிவேலுவின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் இன்று
சனிக்கிழமை (பிப்ரவரி 17) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here