சீனப் புத்தாண்டு காலத்தில் அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டை பயன்படுத்த தவறியதாக 43 வழக்குகள் பதிவு

புத்ராஜெயா:

2024 சீனப் புத்தாண்டுக்கான பண்டிகைக் கால அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை (SHMMP) செயல்படுத்தும்போது, சிறப்பு விலைக் குறியீட்டை பயன்படுத்தத் தவறியதாக மொத்தம் 43 வழக்குகளும், விலைக் குறியீடு இல்லாத ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் SHMMP நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில், கண்டறியப்பட்ட வழக்கில் அதிகபட்ச விலைக்கு மேல் விற்கப்பட்ட எந்த வழக்குகளும் பதிவாகவில்லை என்று, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்தின் (KPDN) அமலாக்க இயக்குநர் ஜெனரல் டத்தோ அஸ்மான் ஆடாம் கூறினார்.

“இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்களில் மொத்தம் 6,186 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று, அவர் இன்று வெளியிடுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here