சாலைத்தடுப்பில் மோதி உயிரிழந்த உணவு விநியோகஸ்தர்

ஜார்ஜ் டவுன்:  ஜாலான் புக்கிட் கம்பீரில் உணவு விநியோகம் செய்பவர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து சறுக்கி விழுந்து இன்று உயிரிழந்தார். 27 வயதான இளைஞனின் சடலம், வடிகால் அருகே இருந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று வடகிழக்கு மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் ரஸ்லாம் அப் ஹமீத் தெரிவித்தார். மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.

ஆரம்ப விசாரணையில், பாதிக்கப்பட்டவர் ஜாலான் யீப் சோர் ஈ நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அவர் தனது இயந்திரத்தின் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி, சாலை தடுப்பில் மோதியதாக அறியப்படுகிறது. விபத்தின் தாக்கம் காரணமாக, பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உடனடியாக இறந்தார் என்று அவர் இன்று கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here