சிரம்பான்:
மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நேற்று (பிப்.24) நிகழ்ந்த விபத்தில் சிங்கப்பூரர் ஒருவர் உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட 24 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற வாகனம் சாலைத் தடுப்பின்மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
விபத்து சிரம்பான்/போர்ட்டிக்சன் நுழைவாயிலுக்கு அருகில் பிற்பகல் 1.20 மணி அளவில் நிகழ்ந்ததாக நெகிரி செம்பிலான் போக்குவரத்துப் புலன்விசாரணை, அமலாக்கத்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் ஸாக்கி ரஹ்மாட் தெரிவித்தார்.
“அந்த ஆடவர் ஜோகூர் பாருவிலிருந்து வடக்குத் திசை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. காரின் கட்டுப்பாட்டை அவர் இழந்து சாலைத் தடுப்பு மீது மோதியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஆடவர் காருக்குள் மாட்டிக்கொண்டார்,” என்று ஸாக்கி கூறினார்.
மேலும் ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.