1MDB விசாரணையில் முன்னாள் சிங்கப்பூர் வங்கியாளர் சாட்சியமளிக்க மறுத்துவிட்டதாக MACC அதிகாரி சாட்சி

நஜிப் ரசாக்கின் 1எம்டிபி வழக்கின் விசாரணை அதிகாரி, சிங்கப்பூரில் உள்ள முன்னாள் வங்கியாளர் ஒருவர், முன்னாள் பிரதமரின் விசாரணையில் சாட்சியம் அளிக்க மறுத்துவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணை அதிகாரி நூர் ஐடா அரிபின், சிங்கப்பூர் அதிகாரிகளால் BSI வங்கியின் முன்னாள் வங்கியாளர் யாக் இயூ சீ இங்கு நீதிமன்றத்தில் ஆஜராக விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு யாக் சிங்கப்பூரில் 18 வாரங்கள் சிறை சென்றதாக ஐடா கூறினார். 2018 ஆம் ஆண்டு யாக்கின் அறிக்கையை எம்ஏசிசி பதிவு செய்ததாகவும், ஆனால் அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு, மற்றொரு முன்னாள் BSI வங்கி ஊழியரான கெவின் ஸ்வாம்பிள்ளை இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக ஆஜரானார்.

பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் அமைக்கப்பட்ட ஒரு கடல்சார் துணை நிறுவனத்தின் நிர்வாகத்தில் 1MDB அதிகாரிகளை விட  தப்பியோடிய தொழிலதிபர் லோ டேக் ஜோ அல்லது ஜோ லோவின் கை ஓங்கியிருந்ததாக  ஸ்வாம்பிள்ளை கூறினார். கேமன் தீவுகளின் நிதி மேலாளர் மூலம் 1MDB செய்த 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM10.1 பில்லியன்) “முதலீடு” குறித்து நஜிப் கவலைப்படுவதாகவும் அவர் கூறினார்.

உரிய சாட்சிகளிடமிருந்து ஆவணங்களைப் பெறுவதற்கும் அறிக்கைகளைப் பதிவு செய்வதற்கும் வெளிநாடுகளின் உதவியைப் பெறுமாறு அப்போதைய சட்டத்த்துறைத் தலைவர் டோமி தாமஸைக் கேட்டுக் கொண்டதாக ஐடா நீதிமன்றத்தில் தெரிவித்தார். எவ்வாறாயினும், சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு அரசாங்கத்தின் கோரிக்கைக்கு சுவிட்சர்லாந்து மற்றும் பார்படாஸ் போன்ற நாடுகள் பதிலளிக்கவில்லை என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 2011 மற்றும் டிசம்பர் 2014 க்கு இடையில் தனது ஆம்பேங்க் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட ரிம2.28 பில்லியன் ரிங்கிட் 1எம்டிபி நிதியில் பணமோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய 25 குற்றச்சாட்டுகளை நஜிப் எதிர்கொண்டுள்ளார். நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா முன் விசாரணை நாளை தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here