தீக்கிரையான உணவகம்; செராஸில் சம்பவம்

செராஸ் உள்ள கம்போங் பாரு சீனாவில் உள்ள உணவகம் தீயில் எரிந்து நாசமானது. மாலை 6.02 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் அருகில் இருந்த ஏழு வாகனங்களும் சேதமடைந்தன. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், இரண்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உணவகம் 80% எரிந்தது. மாலை 6.17 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் புதன்கிழமை (பிப் 28) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். வாகனங்கள் 1% முதல் 10% வரை சேதமடைந்தது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here