கோத்த கினபாலு: பெரிய அலைகள் மோதியதில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் முகமது மாலே முஹம்மது ஹுசின் 43, நோர்பிதா சஃப்ரி 43, நுருல் காசிபா முகமது மலே 18, ஜஸ்டினா புக்லாயன் 41, ஹசலினா புக்லாயன் 37, மற்றும் சஹுரா சஃப்ரி, 39 என அடையாளம் காணப்பட்டனர்.
குழந்தைகள் இர்மான் எல்மான் மற்றும் நூர் கைலா அப்துல்லா, இரண்டு வயது, மற்றும் ஐந்து வயது நூருல் வஃபியா ஜாசிமு ஆகியோரும் அடங்குவர்.திங்கள்கிழமை மாலை 3.45 மணியளவில் சபாவின் கிழக்கு கடற்கரை செம்போர்னா மாவட்டத்தில் உள்ள டோபோ-டோபோ தீவு கடற்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கெவ்லர் படகை அனுப்பியதாக செம்போர்னா தீயணைப்பு மற்றும் மீட்பு நீர்நிலையத் தலைவர் நூர் ஜலி மஸ்லா தெரிவித்தார். இடத்தை அடைந்தபோது, படகு ஏற்கெனவே நீரில் மூழ்கியிருப்பதைக் கண்டோம். தொடர்பு கொண்டபோது, “ஒன்பது பேர் மீட்கப்பட்தாக அவர் கூறினார்.









