மார்ச் 2 அன்று நடந்த டோட்டோ ஜாக்பாட் 1இல் 13.4 மில்லியன் ரிங்கிட்டை சபாவைச் சேர்ந்த பாதுகாவலர் வென்றார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாவலராக இருந்த 53 வயதான அவர், STM Lottery Sdn Bhdஇல் தனது பிறந்த தேதி மற்றும் கார் பதிவு எண்ணை இணைத்து வெற்றி எண்களான 1203 மற்றும் 1227 ஐ உருவாக்கினார். இந்த இரண்டு எண்களையும் நான் வாங்கினேன். அது எனக்கு ரிங்கிட் 2.60 (சபாவின் விற்பனை வரியான RM0.60 உட்பட) மட்டுமே செலவாகும்.
முதலில் ஓய்வு பெறும் வரை வேலை செய்ய நினைத்ததாக அந்த நபர் விளக்கினார். இருப்பினும், அவர் தான் பரிசுத் தொகையினை பெற்ற பிறகு, வட்டி மட்டுமே போதுமானதாக இருக்கும். அவர் இனி வேலை செய்யத் தேவையில்லை. வெற்றியாளர் தனது மனைவிக்கு நற்செய்தியைச் சொன்னபோது கதறி அழுததாகவும், அவர்களின் முழு குடும்பத்திற்கும் தங்கும் அளவுக்கு பெரிய வீட்டைக் கட்ட வேண்டும் என்ற அவர்களின் கனவு இறுதியாக நனவாகும் என்றும் கூறினார்.
ஒரு பழங்குடி சபாஹான் என்பதால், நான் இப்போது எனது மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நான் திரும்பிச் சென்று எனது கிராமத்தை மேம்படுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறினார். மொத்த ஜாக்பாட் தொகையான 14,962,901.80 ரிங்கிட்டில் இருந்து ஒரு பெரியத் தொகையான 13,403,860.25 ரிங்கிட்டை ஆடவர் வென்றார். இதற்கிடையில், மீதி RM1,559,041.55 கோலாலம்பூர் மற்றும் சபாவில் இருந்து இரண்டு i-System வெற்றியாளர்களிடையே பிரித்து வழங்கப்பட்டது.