ஜோகூர் ஜெயா பெட்ரா கட்டுமான தளத்தில் சோதனை: 137 ஆவணமற்றோர் கைது

ஜோகூர் பாரு குடிவரவுத் துறையினர் கட்டுமான தளத்தில் நடத்திய நடவடிக்கையின் போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 137 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளனர். ஜெயா பெட்ராவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) அதிகாலை 12.38 மணியளவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக இயக்குனர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார்.

இந்தப் பகுதியில் பல புலம்பெயர்ந்தோர் இருப்பதாக பொது மக்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து துறை சோதனையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில்,  200 க்கும் மேற்பட்டோர்  ‘rumah kongsi’ என 12 அறைக்குள் வசித்து வந்தனர் என்று அவர் வெள்ளிக்கிழமை இங்கே ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பஹாருதீன் 219 புலம்பெயர்ந்தவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒரு உள்ளூர் நபர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.  அவர்களில் 137 பேர் பல்வேறு குடியேற்றக் குற்றங்களின் கீழ் குற்றங்களைச் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 பெண்கள் உட்பட 98 இந்தோனேசியர்கள், 19 பங்களாதேஷ் பிரஜைகள், இரண்டு பெண்கள் உட்பட 16 மியான்மர் பிரஜைகள், ஒரு பெண் உட்பட இரண்டு வியட்நாம் பிரஜைகள் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்கள் அடங்குவதாக அவர் கூறினார். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் 18 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தற்போது செத்தியா டிராபிகா குடிநுழைவு டிப்போவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பஹாருதீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here