அடுக்குமாடி குடியிருப்பிற்கு வெளியே இறந்து கிடந்த போலீஸ்காரர்

ஶ்ரீ கெம்பாங்கனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை போலீஸ்காரர் ஒருவர் இறந்து கிடந்தார். 34 வயதான கார்ப்ரல் செந்தூல் போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்தவர். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான், மரணத்திற்கான காரணத்தை அறிய, பிரேதப் பரிசோதனையின் முடிவுகளுக்காக காவல்துறையினர் காத்திருப்பதாகக் கூறினார்.

சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் ஹுசைன் கூறுகையில், சம்பவ இடத்தில் இருந்ததாக நம்பப்படும் ஒரு கும்பலை நாங்கள் தேடி வருகிறோம். அவர்கள்  அந்த போலீஸ்காரரின் மரணத்திற்கு  காரணம் என்று நம்பப்படுகிறது.

காஜாங் போலீசாருக்கு அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் குறித்து அழைப்பு வந்ததாகவும், தாமான் இம்பியான் இண்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே போலீஸ்காரர் அசையாமல் கிடப்பதைக் கண்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here