சுங்கை பூலோவில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததில் நான்காம் படிவம் மாணவி ஒருவர் உயிரிழந்தார். சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ஹபீஸ் முஹம்மது கூறுகையில், சம்பவம் குறித்து தங்களுக்கு காலை 11:26 மணிக்கு புகார் கிடைத்தது.
மாணவியின் உடல் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் பிரேதப் பரிசோதனையில் உயரத்தில் இருந்து விழுந்ததன் விளைவாக தலையில் ஏற்பட்ட காயங்கள் இறப்புக்கான காரணம் என்று அவர் சனிக்கிழமை (மார்ச் 23) அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று முகமட் ஹபீஸ் மேலும் கூறினார். பதட்டத்தைத் தூண்டும் அல்லது பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு, குறிப்பாக சமூக ஊடக பயனர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.