சுங்கைப்பட்டாணி சிடாம் கிரியில் மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 19 வயது பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தார். பிற்பகல் 2.50 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், டொயோட்டா வயோஸ் காரான Mercedes Benz மீது மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மூன்று வாகனங்களும் சுங்கைப் பட்டாணியில் இருந்து கூலிம் நோக்கி பயணித்ததாக கோல மூடா காவல்துறை தலைவர் ஜைதி சே ஹாசன் தெரிவித்தார்.
மெர்சிடிஸ் பென்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தபோது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் திடீரென ஒரு சந்திப்பில் வலதுபுறம் திரும்பியதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன. மெர்சிடிஸ் பென்ஸ் வேகத்தைக் குறைக்க முயன்றது. ஆனால் இடைவெளி குறைவாக இருந்ததால் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது.
வாகனமோட்டி தூக்கி எறியப்பட்டதோடு டொயோட்டா வியோஸ் மீது மோதியது. மோட்டார் சைக்கிளோட்டி பலத்த காயம் அடைந்ததோடு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று அவர் இன்று கூறினார். பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுல்தான் அப்துல் ஹக்கீம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஜைதி கூறினார்.