கோலாலம்பூர்:
மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ராவை மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதனை தகவல் தொடர்பு அமைச்சரும், அரசாங்க அதிகாரப்பூர்வ பேச்சாளருமான ஃபாஹ்மி ஃபட்சில் இன்று உறுதிப்படுத்தினார்.
சற்று முன்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.