கோலாலம்பூர்: தனது காதலியின் நான்கு வயது மகளை மானபங்கம் செய்ததாக பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அம்பாங் ஜெயா காவல்துறைத்தலைவர் உதவி ஆணையர் முகமட் அஸாம் இஸ்மாயில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) ஒரு அறிக்கையில், 32 வயதான பெண் ஒருவர் தனது தாயின் காதலன் தன்னைத் தொட்டு முத்தமிட்டதாக தனது மகள் கூறியதை அடுத்து புகார் அளித்ததாக தெரிவித்தார்.
மெலாவதி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன், சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் மார்பிலும் கை வைத்துள்ளார் என்று அவர் கூறினார். விசாரணையில் 37 வயது காவலாளி மார்ச் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக ஏசிபி முகமது அஸாம் தெரிவித்தார். அந்நபர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்ட நபர் மார்ச் 12 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.









