KLIAஇல் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஏழு நாள் காவலில் வைக்க உத்தரவு

 கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) டெர்மினல் 1 இன் வருகை முனையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் இருந்த 38 வயது சந்தேக நபருக்கு எதிராக போலீசார் ஏழு நாள் காவலில் வைக்க உத்தரவைப் பெற்றுள்ளனர். நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கூற்றுப்படி, ஏப்ரல் 22 ஆம் தேதியுடன் முடிவடையும் தடுப்பு காவல் உத்தரவு இன்று காலை கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பெறப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 117ஆவது பிரிவின் கீழ் இந்த ரிமாண்ட் உத்தரவு பெறப்பட்டது.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் கோட்டா பாரு பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உசேன் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார். அதிகாலை 1.20 மணியளவில், சந்தேக நபர் வருகை மண்டபத்தின் நுழைவாயிலில் தனது மனைவியை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார்.  அதில் ஒரு குண்டு அவரது இரண்டு மெய்க்காப்பாளர்களில் ஒருவரை தாக்கியது.

சந்தேக நபர் பிளாக் C இன் நிலை இரண்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தப்பிச் சென்றுள்ளார். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1 இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த மெய்ப்பாதுகாவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக ஹுசைன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here