வெள்ளம்: கோல சிலாங்கூரில் 535 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்று 50 பேராக இருந்த நிலையில் இன்று 631 பேராக அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, 114 குடும்பங்களைச் சேர்ந்த 535 பேர் பெட்டாலிங் மற்றும் கோல சிலாங்கூரில் திறக்கப்பட்ட இரண்டு புதிய நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர் என்று தேசிய பேரிடர் முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன், பாலையா பெர்மாடாங் பாசீர் ஆகிய இடங்களிலுள்ள நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர் என்று அது மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here