முன்னாள் போலீஸ் படைத்தலைவர் ஹனிப் உமர் காலமானார்

பெட்டாலிங் ஜெயா: முன்னாள் போலீஸ் படைத்தலைவர்  ஹனிப் உமர் தனது 85ஆவது வயதில் காலமானார். ஒரு சுருக்கமான அறிக்கையில் அவரது மகன் அப்துல் ரஹ்மத் உமர் ஹனிஃப், இன்று அதிகாலை 2.15 மணியளவில் தனது தந்தை காலமானார் என்று கூறியிருந்ததாக பெரித்தா  ஹரியான் தெரிவித்துள்ளது.

அப்துல் ரஹ்மத் உமர் முகமது ஹனிஃப் என்ற நான் இன்று அதிகாலை 2.15 மணியளவில் எனது அன்பான தந்தையின் காலமானார் என்பதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

ஹனிஃப் உமர்  ஜூன் 8, 1974 அவர் ஜஜிபியாக பதவி உயர்வு பெற்று 20 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். அப்போது அவருக்கு வயது 35. பேராக் தெலுக் இந்தானில் பிறந்த ஹனிஃப், இளம் வயதிலேயே போலீஸ் படையில் உயர் பதவியை பெற்றவர்.

செப்டம்பர் 7, 1970 இல் மலாக்கா காவல்துறைத் தலைவராகவும், பின்னர் டிசம்பர் 6, 1971 இல் சிலாங்கூர் காவல்துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 1, 1973 இல் அவர் துணை ஐஜிபியாக நியமிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here