கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய டெர்மினல் 1ல் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்ட சந்தேக நபர் சவூதி அரேபியாவில் பணிபுரிய ஆயத்தமாகி கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் கம்யூன் டத்தோ ஹுசைன் ஒமர் கான், சந்தேக நபர் ஹஃபிசுல் ஹராவி 38, KLIA துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றிருந்தார்.
சனிக்கிழமை (ஏப்ரல் 20) தேசிய மசூதியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, துப்பாக்கி சூடு நடத்திய பிறகு அவர் தனது மருத்துவ அறிக்கையை (அவரது புதிய வேலைக்குத் தேவையானது) சேகரிப்பதற்காக கிளந்தனுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.
ஏப்ரல் 22 ஆம் தேதியுடன் காலாவதியாகும் தனது காவலை நீட்டிக்க காவல்துறை விண்ணப்பிப்பதாக அவர் கூறினார். நாங்கள் அதை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிப்போம். அந்த கால கட்டத்திற்குள் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 27 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளோம் என்றார் அவர்.