கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ஆடவரின் சடலம் மீட்பு

ஜாலான் சிரம்பான்-போர்ட்டிக்சன், கிலோமீட்டர் 10 இல் உள்ள பேருந்து நிழற்குடைக்கு அருகிலுள்ள புதர்களில் சனிக்கிழமை (ஏப்ரல் 20) கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர் அய்டி ஷாம் மொஹமட் கூறுகையில், காலை 9.20 மணியளவில் 41 வயதுடையவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு அறிக்கை கிடைத்தது.

பாதிக்கப்பட்டவரின் உடலைப் பரிசோதித்ததில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் சோதனைகளில் பாதிக்கப்பட்டவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள், ஹெல்மெட், செருப்புகள் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன  என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

போர்ட்டிக்சன் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், பாதிக்கப்பட்டவரின் கழுத்து மற்றும் தலையின் ஓரத்தில் வெட்டுக் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்த அவர், மரணத்திற்கான காரணம் கழுத்தில் வெட்டப்பட்ட காயம் என்று தீர்மானிக்கப்பட்டது. குற்றவியல் சட்டம் பிரிவு 302இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், சம்பவம் குறித்த தகவலுக்கு விசாரணை அதிகாரி ஏஎஸ்பி ஹுசைரின் சே ஹுசைனை 012-965 4927 என்ற எண்ணிலோ அல்லது போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் செயல்பாட்டு அறையை 06-646 2999 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திலோ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here