DNB செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லையா? தீர்க்கப்படும் என்கிறார் அன்வார்

ஷா ஆலம்: டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் (DNB) உள் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று கூறப்படும் பிரச்சினை அடுத்த வாரம் அரசாங்கத்தால் தீர்க்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். இன்று நடைபெற்ற பிகேஆர் 25ஆவது ஆண்டு சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு நிதியமைச்சருமான அன்வார் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறினார்.

நேற்று, DNB அதன் நிர்வாகம் மற்றும் கொள்முதல் நடைமுறைகளில் முறைகேடுகள் இல்லை என்று மறுத்துள்ளது. அதன் டெண்டர் மற்றும் கொள்முதல் செயல்முறைகள் கண்டிப்பான நிர்வாக தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளின்படி கட்டமைக்கப்பட்டுள்ளன என்று நிறுவனம் வலியுறுத்தியது.

சிங்கப்பூர் நியூஸ் போர்டல் CNA ஆல் செய்யப்பட்ட பல தவறான குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்துவதற்காக DNB அறிக்கையை வெளியிட்டது. மலேசியாவின் பில்லியன் டாலர் 5G ரோல்-அவுட், சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசுக்கு சொந்தமான ஆபரேட்டர் இடையே ஒப்பந்தம் முறிந்ததால் தடுமாறுகிறது என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here