ஷா ஆலம், கோத்தா கெமுனிங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிந்ததில் மூன்று தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்தார். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள் மற்றும் தீயணைப்பு) அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில் காலை 10.14 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தனக்கு அழைப்பு வந்தது.
ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து 12 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார். தொழிற்சாலை ஊழியர்கள் நைட்ரஜன் வாயுவின் அழுத்ததை சோதனை நடத்தியபோது நைட்ரஜன் வாயு வெடிப்பு ஏற்பட்டது. நைட்ரஜன் வாயு கசிந்த இடத்தில் இரசாயனங்கள் காரணமாக எந்த ஆபத்து குறித்து ஆராய ஒரு சிறப்புக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக முக்லிஸ் கூறினார். வெடிப்பினால் கட்டிடத்தின் கட்டமைப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.