கோலாலம்பூர்: மற்றவர்களைப் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன், உங்கள் மாநிலத்தின் மீது கவனம் செலுத்துங்கள் என்று கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி முகமட் நோரிடம், ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார். மற்ற மாநிலங்களில் மூக்கை நுழைப்பதற்குப் பதிலாக, கெடாவில் அவர் அறிவித்த அனைத்து திட்டங்களையும் முடித்து தன்னை பிஸியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சிலாங்கூர் மந்திரி பெசாருடன் ஒப்பிடுகையில் மாறுப்பட்டிருக்கிறது. அங்கு என்ன அறிவிக்கப்பட்டதோ அது நிறைவேறியது. கெடா மென்ட்ரி பெசார் அமைதியாக இருக்க வேண்டும். அவர் மீது சிலாங்கூர் சுல்தான் சம்பந்தப்பட்ட ஒரு தேசத்துரோக வழக்கும் உள்ளது என்று அவர் செவ்வாயன்று (ஏப்ரல் 23) செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பக்காத்தான் ஹராப்பானுக்கும் பாரிசான் நேசனலுக்கும் இடையிலான விரிசல்களை பெரிக்காத்தான் நேஷனல் ஏற்படுத்தும் என்ற சனுசியின் கூற்றுகள் பற்றி கேட்டபோது ஃபஹ்மி இவ்வாறு கூறினார். கூட்டணியில் இருந்து வேட்பாளர் வரவில்லை என்றால், கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பங்கேற்பதில் பாரிசான் கூறு கட்சிகள் தங்கள் விருப்பமின்மையை வெளிப்படுத்தியதை அடுத்து, ஒற்றுமை அரசாங்கத்திற்குள் விரிசல் ஏற்பட்டதாக சானுசி கூறினார்.
கோல குபு பாரு வேட்புமனுத் தாக்கல் தினம் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதே நேரத்தில் வாக்குப்பதிவு மே 11 ஆம் தேதி திட்டமிடப்பட்டது. டிஏபி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் மார்ச் 21 அன்று இறந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.










