ஜாவாவில் 6.3 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் ஜாவாவில் இன்று நள்ளிரவு 12.29 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக வலுவான நிலநடுக்கம் கண்டறியப்பட்டது. இந்த நிலநடுக்கம் 8.2° தெற்கிலும், 107.2° கிழக்கே சுகாபூமிக்கு தெற்கே 147கிமீ தொலைவிலும் 70கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது. முதற்கட்ட மதிப்பீட்டில் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here