ஜார்ஜ் டவுன், செபெராங் பிறை கிரியான் ஒருங்கிணைந்த பசுமைத் தொழில் பூங்கா மூலம் பினாங்குக்கு நீர் வழங்க பேராக் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விஷயத்தை பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா மற்றும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமது ஆகியோர் ஒப்புக்கொண்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். துவாங்கு சுல்தான் நஸ்ரினும், மாநில அரசாங்கமும் டத்தோஸ்ரீ சாரணியும், கிரியானின் பசுமைத் திட்டத்தின் கீழ் சுங்கை பேராக்கிலிருந்து குறைந்த பட்சம் செபெராங் பிறைக்கு நீர் வழங்க ஒப்புக்கொண்டதாக எங்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. முதல் கட்டமாக நிபோங் திபால் மற்றும் சுங்கை பகாப் வழியாக செபெராங் பிறையை அடையும்.
நான் (மேலும்) சமீபத்தில் கெடாவுடன் ஒரு சிறந்த உறவு ஏற்பட்டிருப்பதாக நம்புகிறேன். பினாங்கு நீர் வழங்கல் அடிப்படையில் கெடாவுடன் ஒத்துழைக்க வேண்டிய தேவைக்கு மிகவும் தொழில்முறை அணுகுமுறையை பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அவர் கூறினார். இன்று பினாங்கு மட்டத்தில் மடானி 2024 ஹரிராயா கொண்டாட்டத்துடன் நடைபெற்ற வடக்கு மண்டல மடானி ராக்யாட் 2024 நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் அவர் பேசுகையில் இவ்வாறு கூறினார்.








