தாய்லாந்தில் இருந்து தருவிக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

கோத்தா பாரு: மாம்பழங்களுக்குள்  மாம்பழக் கூழ் அந்துப்பூச்சி (Stemochtetus mangiferae) பழங்களில் இருப்பதாக நம்பப்பட்டதை அடுத்து, தாய்லாந்தில் இருந்து மாம்பழங்கள் மலேசியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மே 12 அன்று சோதனைச் சாவடியில் சரக்குகளை பரிசோதித்தபோது இது கண்டறியப்பட்டதாக கிளந்தானில் உள்ள மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் (Maqis) இயக்குனர் சையத் ஃபுவாட் சையத் புத்ரா கூறினார். 26,000 ரிங்கிட் மதிப்புள்ள சரக்கு, மேல் நடவடிக்கைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்த வழக்கு Maqis சட்டத்தின் 14ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here