லஞ்சம் வாங்கியதாக இரு அமலாக்க அதிகாரிகள் கைது

மொத்தம் 23,000 ரிங்கிட்டிற்கும் மேல் லஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் சீருடை அணிந்த அமலாக்க அதிகாரிகள் இருவர் இன்று முதல் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மாஜிஸ்திரேட் அஹ்மட் சயாபிக் அய்சாத் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார். ஆதாரங்களின்படி, இருவரும் நேற்று இரவு பெங்கலான் செப்பாவில் உள்ள அவர்களது அலுவலகத்தில் தனித்தனியாக கைது செய்யப்பட்டனர்.

43 வயதான  அதிகாரி, ஆபத்தான மருந்துச் சட்டம் 1952 இன் பிரிவு 39 (C) இன் கீழ் ஒரு சந்தேகத்திற்குரிய நபரின் மீது குறைவான குற்றத்தை சுமத்துவதற்காக 13,000 ரிங்கிட் கேட்டதற்காக இரவு 10.30 மணிக்கு கைது செய்யப்பட்டார் என்று கூறினார். இரண்டாவது அதிகாரி 29, அதே நோக்கத்திற்காக 10,000 ரிங்கிட் பெற்றதாகக் கூறி இரவு 11.10 மணிக்கு கைது செய்யப்பட்டார்.

கிளந்தான் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) இயக்குநர் ரோஸ்லி ஹுசைனைத் தொடர்பு கொண்டபோது, எம்ஏசிசி சட்டம் 2009 பிரிவு 17 (a) இன் கீழ் விசாரணைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here