அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்த பெண்: புத்ரா பெர்டானாவில் சம்பவம்

சிப்பாங்: அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்தின் அடிப்படையில்  தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கதவு உடைக்கப்பட்ட நிலையில்,  பெண் ஒருவர் இறந்து கிடக்க காணப்பட்டார். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறுகையில், சனிக்கிழமை (மே 25) புத்ரா பெர்டானாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கதவைத் திறப்பதற்கு காவல்துறையினரால் தங்களுக்கு அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.

பூட்டிய கதவு சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாக திறக்கப்பட்டது. இறந்த பெண்ணின் உடல் உள்ளே கண்டெடுக்கப்பட்டது. உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார். சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷான் கோபால் கிருஷ்ணன் வழக்கை உறுதிப்படுத்தியதோடு தற்பொழுதைக்கு இது திடீர் இறப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here