பலதார மணத்திற்காக ஒவ்வொரு மாதமும் சுமார் 30 மலேசிய தம்பதிகள் தெற்கு தாய்லாந்திற்கு செல்கின்றனர்

நாராதிவாட்: கோலாலம்பூர், கிளந்தான் மற்றும் தெரெங்கானு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறைந்தது 30 தம்பதிகள் ஒவ்வொரு மாதமும் பலதார மணம் செய்து கொள்வதற்காக மாநிலத்திற்கு செல்வதாக நாரதிவாட் இஸ்லாமிய  சமய மன்றம் வெளிப்படுத்தியுள்ளது. அதன் துணைத் தலைவர் அப்துல் அஜிஸ் சே மாமத் கூறுகையில், இந்த ஜோடிகளில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் உறவுகளை முறைப்படுத்தும் நோக்கத்துடன் வந்ததாகவும், இதற்காக நீண்ட தூரம் பயணம் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இருப்பினும், தெற்கு தாய்லாந்தில் திருமணம் செய்வது போல் தோன்றினாலும் அது எளிதானது அல்ல. ஜோடிகளின் பின்னணி சோதனைகள் உட்பட குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். கட்டாய நிபந்தனைகளில் ஒன்று, பெண் விதவையாகவோ அல்லது விவாகரத்து பெற்றவராகவோ இருந்தால், விவாகரத்துச் சான்றிதழ் அல்லது முந்தைய மனைவியின் இறப்புச் சான்றிதழை வழங்குவது. இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அல்லது சந்தேகத்திற்குரியதாக இருந்தால் திருமண பதிவினை தொடர அனுமதிக்கப்படாது அவர் சமீபத்தில் பெர்னாமாவிடம் கூறினார்.

திருமணங்கள் பொறுப்பற்ற முறையில் நடத்தப்படுவதில்லை என்று அப்துல் அஜீஸ் வலியுறுத்தினார. ஏனெனில் அவை உண்மையாக இல்லாவிட்டால் பரம்பரை மற்றும் எதிர்கால தாக்கங்களை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். தெற்கு தாய்லாந்தில் பலதார மணம் செய்ய விரும்பும் தம்பதிகள், எதிர்கால பிரச்சனைகளைத் தவிர்க்க, மலேசியாவில் உள்ள மலேசியத் துணைத் தூதரக அலுவலகத்திலிருந்து சரிபார்ப்பைப் பெற்று, மலேசியாவில் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here