4 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ: சகோதரிகள் பலி – தாயார் கவலைக்கிடம்

மலாக்கா, ஜாலான் பிளாசா மஹ்கோத்தாவில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் வாடகை அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய இரண்டு இளம் சகோதரிகள் மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தனர். அவர்களின் தாயார் ஆபத்தான நிலையில் உள்ளார். நூர் ரியாஷா சஹ்ரா அப்துல்லா  அவரது சகோதரி நுராலியா கரிசா ஆகியோரும்  அவர்களது தாயாரான அஸ்லிஹா நகா அரிஃபின் 40, ஆகியோர் பிற்பகல் 1.30 மணியளவில் கடையின் மூன்றாவது மாடியில் தீயணைப்பு வீரர்களால் சுயநினைவின்றி  மீட்கப்பட்டதாக மலாக்கா தெங்கா காவல்துறைத் தலைவர் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.

இரண்டாவது மாடியில் ஒரு அறையில் வாடகைக்கு குடியிருக்கும் திருமணமான தம்பதியினர், அதே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பு தீ விபத்தில் இருந்து தப்பி நலமுடன் இருக்கின்றனர். கட்டடத்தின் உரிமையாளரான தரைத்தளத்தில் உள்ள கடையின் உரிமையாளர், மதியம் 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதை உணர்ந்து 999 க்கு அழைத்ததாக அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முதல் தளம் முதல் மூன்றாவது தளம் வரை 21 அறைகள் இருந்ததாகவும், அவற்றில் 6 அறைகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று பாடிட் கூறினார். தீ விபத்து ஏற்பட்ட போது ஐந்து  பேர் மட்டுமே இருந்ததாக அவர் கூறினார். தீ விபத்து மற்றும் இறப்புக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குடும்பத்தின் உறவினர்களைக் கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here