சைபர்ஜெயாவில் உள்ள சுங்கை ராசாவ், கம்போங் புலாவ் மெராந்தி என்ற இடத்தில் 14 வயது சிறுவன் தனது நான்கு நண்பர்களுடன் நீந்தச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தான். வெள்ளிக்கிழமை (ஜூலை 19) மாலை சுமார் 4.41 மணியளவில் நீந்திக் கொண்டிருந்த போது பலத்த நீரோட்டத்தில் பாதிக்கப்பட்ட நிக் அகமது முசாக்கிர் நிக் ரசாலி அடித்துச் செல்லப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
சம்பவத்திற்குப் பிறகு விரைவில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் மாலை 6.36 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் உடல் மீட்கப்பட்டது என்று அவர் சனிக்கிழமை (ஜனவரி 20) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.










