தேசிய பூப்பந்து மகளிர் இரட்டையர் ஜோடியான பேர்லி டான்-எம் தினா, சீனாவின் சென் கிங் சென்-ஜியா யி ஃபேனிடம் சண்டையிட்டு 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தவறினர். பேர்லி-தினா 12-21, 21-18, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து, உலகின் நம்பர் 1 ஜோடியான சீனாவைச் சேர்ந்த ஜோடி இறுதிப் போட்டிக்கு செல்ல வழி வகுத்தது.
பேர்லி-தினாவுக்கு வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு இன்னும் உள்ளது. அவர்கள் சீனாவின் லியு ஷெங் ஷு-டான் நிங் அல்லது ஜப்பானின் மட்சுயாமா நமி-ஷிதா சிஹாருவை எதிர்கொள்வர்.









