‘பாரிஸ் ஒலிம்பிக்’.. இந்தியாவுக்கு 2ஆவது பதக்கம்: மனு பாக்கர் வரலாற்று சாதனை!

பாரிஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. மனு பாக்கர், சர்போஜோட் சிங் இணை கொரிய இணையை வீழ்த்தி, பதக்கம் வென்றுள்ளது.

கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவின், வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியாவின் மனு பாக்கர், சர்போஜோட் மற்றும் தென்கொரியாவின் லீ வான்ஹோ, ஒ யோ ஜின் இணை இடையில் போட்டி நடைபெற்றது. இதில், கடும் போட்டி ஒன்றும் நடைபெறவில்லை. துவக்கம் முதலே, இந்திய அணி கடும் ஆதிக்கம் செலுத்தி, இறுதியில் 16-10 என்ற கணக்கில் அபார வெற்றியைப் பெற்று, மனு பாக்கர்,சர்போஜோட் இணை வெண்கலப்பதக்கத்தை வென்றது.

இப்பதக்கம் மூலம், மனு பாக்கர் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ஆம், இதுவரை எந்த இந்திய ஒலிம்பிக் வீரர், வீராங்கனையும் ஒரே ஆண்டில் இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றது கிடையாது. அந்த சாதனையை தற்போது மனு பாக்கர் படைத்துள்ளார். இவர் இதற்குமுன், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவு போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here