ஜார்ஜ் டவுன்: முன்னாள் மாமன்னரின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முஹிடின் யாசின் மீது பெக்கான் அம்னோவின் இளைஞர், புத்ரி பிரிவுகள் நேற்று புகார் தாக்கல் செய்ததையடுத்து, ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர், ஜாலான் பதானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கெடா மந்திரி பெசார் சனுசி நோரைப் போலவே முஹிடினையும் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
3R (இனம், மதம் மற்றும் ராயல்டி) கருத்து தெரிவித்ததற்காக மந்திரி பெசார் ஏற்கனவே ஷா ஆலம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். எனவே முஹிடின் மீதும் அதே (நடவடிக்கை) எடுக்கப்பட வேண்டும் என்று ஜசெக தலைவர் லிம் குவான் எங் கலந்து கொண்ட செய்தியாளர் கூட்டத்தில் ராயர் கூறினார். முஹிடின் கூச்ச் அவதூறு மட்டுமல்லாமல் மாமன்னரின் அதிகாரத்தையும் கண்ணியத்தையும் இழிவுபடுத்தியதாக அமைந்திருக்கிறது என்றார்.
நேற்று, அம்னோ துணைத் தலைவர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவைப் பற்றி அவமரியாதையாகப் பேசியதாகக் கூறப்படும் பெர்சத்து தலைவராக இருக்கும் முஹிடின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருந்ததாகவும், 10ஆவது பிரதமரை நியமிப்பதற்கு மன்னரால் தன்னை அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் முஹிடின் கூறிய தேர்தல் பிரச்சார உரையைப் பற்றிய செய்திகள் என்று நம்பப்படுகிறது. முஹிடினின் பேச்சு டிக்டோக்கில் வைரலாகி வருவதாக ராயர் கூறினார்.









