2023 ஆம் ஆண்டு முதல் 1,800 க்கும் மேற்பட்ட போலீசார் தவறுகளுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர் – துணை ஐஜிபி

புக்கிட் அமான் 2023 ஆம் ஆண்டு முதல் 1,800 காவல்துறையினருக்கு மேல் தவறு செய்ததற்காக தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக  போலீஸ் படையின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை கூறுகிறார். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 631 பணியாளர்கள், அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மொத்தத்தில், அவர்களில் 36 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் சனிக்கிழமை (செப்டம்பர் 7) பல்கலைக்கழக கெபாங்சான் மலேசியாவில் (யுகேஎம்) மாணவர் காவல் தன்னார்வப் படையினருக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். 2023 ஆம் ஆண்டில் 1,238 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர்களில் 139 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் கும்பலுடன் ஒத்துழைப்பது ஆகிய குற்றங்களை அவர்கள் செய்திருக்கின்றனர்.  உண்மையில், நான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (என்சிஐடி) இயக்குநராக இருந்தபோது, ​​மாநில என்சிஐடி தலைவர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் மீது பல்வேறு கிரிமினல் குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்  என்று அவர் கூறினார். காவல்துறையில் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன மற்றும் எடுக்கப்படும் என்று அயோப் கான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here