GISBயுடன் இணைக்கப்பட்ட சிரம்பான் வணிகங்கள் கைவிடப்பட்டதாகக் கண்டறியப்பட்டது

சிரம்பான் 2இல் உள்ள குளோபல் இக்வான் சர்வீஸ் மற்றும் பிசினஸ் ஹோல்டிங்ஸ் (GISB ) க்கு சொந்தமான பல வணிக வளாகங்கள் கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 18) முதல் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜிஐஎஸ்பிக்கு சொந்தமான உணவகத்தை சினார் ஹரியான் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) ஆய்வு செய்தபோது, ​​அந்த வளாகத்தில் சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவுப் பாத்திரங்கள் கழுவப்படாமல் அலங்கோலமாக இருப்பதைக் கண்டறிந்தார்.

தொழிலாளர்கள் எங்கும் காணப்படவில்லை என்று ஒரு வர்த்தகர் கூறினார். மேலும் அதிகாரிகளைப் போன்ற சில நபர்கள் வந்து வளாகத்தை சோதனை செய்ததாக மற்றொரு வர்த்தகர் குறிப்பிட்டார். அங்கு பணிபுரிந்தவர்கள் கைது செய்யப்பட்டார்களா அல்லது தப்பி ஓடிவிட்டார்களா என்பது தெரியவில்லை. GISB மளிகைக் கடைகள், செண்டோல் கடைகள், கஃபேக்கள், பேக்கரிகள் மற்றும் கேக் விற்கும் ஸ்டால்களை இப்பகுதியில் இயங்கி வந்ததாக நம்பப்படுகிறது.

GISB-இணைக்கப்பட்ட சமூக நல இல்லங்களில் துன்புறுத்தலுக்கு ஆளான  சிறார்கள்  மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மனித கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் பிற குற்றங்களில் GISB ஈடுப்பட்டிருப்பதாக  போலீசார் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here