இல்லாத முதலீட்டு திட்டத்தில் சிக்கி 463,792 ரிங்கிட்டை இழந்த கட்டுமான ஒப்பந்ததாரர்

குவாந்தானில்  இல்லாத முதலீட்டு திட்டத்தில் சிக்கிய கட்டுமான ஒப்பந்ததாரர் 463,792 ரிங்கிட்டை இழந்துள்ளார். பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான், செப்டம்பர் தொடக்கத்தில் தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் விளம்பரத்தைப் பெற்ற 65 வயதான நபர் பங்கு முதலீட்டுத் திட்டத்தில் ஆர்வம் காட்டினார்.

பாதிக்கப்பட்ட, ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு, சந்தேகநபர் வழங்கிய இணையதளம் மூலம் செய்யப்பட்ட முதலீடுகளுக்கு 20 விழுக்காடு  கணிசமான வருமானம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அவர் விளக்கினார். செப்டம்பர் 5 மற்றும் 20 க்கு இடையில், பாதிக்கப்பட்டவர் 463,792 ரிங்கிட்டை சந்தேக நபர் வழங்கிய ஆறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.

சந்தேக நபரை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்தார்.  பின்னர் அவர் குவாந்தன் காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்று திங்களன்று (செப்டம்பர் 23) ஒரு அறிக்கையில் யஹாயா கூறினார் .தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், லாபகரமான வருமானம் குறித்த அவர்களின் வாக்குறுதிகளால் எளிதில் திசைதிருப்பப்பட வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை எச்சரித்தார்.

மோசடிக்கு பலியாவதைத் தவிர்ப்பதற்காக இதுபோன்ற திட்டங்களில் ஈடுபடுவதற்கு முன்பு எப்போதும் காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் சரிபார்க்குமாறு  அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here