இயந்திர சக்கரத்தில் தலை முக்காடு சிக்கியதால் உயிரிழந்த தொழிலாளி

­சிலாங்கூர், சபாங் பெர்னாமில் உள்ள கிராண்ட் சபாங் ஹோட்டலின் வாட்டர் கேட் ( ச, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை ஊழியர் ஒருவரின் தலை  கேட் இயந்திரத்தில் சிக்கியதால் அவர் உயிரிழந்தார். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாடுகளுக்கான உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசல் அஸ்பர், பிற்பகல் 3.35 மணிக்குத் தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், சபாங் பெர்னாம் நிலையத்திலிருந்து ஒரு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் கூறினார்.

ஆரம்பகட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரின் தலை முக்காடு கேட் ரோலரில் சிக்கியிருந்தது தெரியவந்தது. சுகாதார அமைச்சகப் பணியாளர்களால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். மேலதிக விசாரணைக்காக சடலம் பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர், 56 வயதான அந்தப் பெண் கேட்டின்  மீது கிடந்ததைக் கண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here