அலோர் ஸ்டார்:
இன்று காலை 8 மணி நிலவரப்படி, கெடா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 458 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,374 பேராக பதிவாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் அங்குள்ள நான்கு மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள மொத்தம் 14 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று, சமூக நலத்துறையின் பேரிடர் தகவல் போர்டேல் தெரிவிக்கிறது.










