கோல க்ராய்: இறந்த பசுவின் மீது கார் மோதி கவிழ்ந்ததில் 56 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது கணவர் மற்றும் மகள் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) காலை 6.57 மணியளவில் ஜாலான் கோத்த பாரு-குவா முசாங்கில் இந்த விபத்து நடந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஓட்டிச் சென்ற கார், சாலையின் குறுக்கே கிடந்த பசுவின் சடலத்தைத் தவிர்க்கத் தவறியதால் விபத்து ஏற்பட்டதாக கோலா க்ராய் OCPD துணைத் தலைவர் மஸ்லான் மாமத் தெரிவித்தார். கார் எதிர் பாதையில் சறுக்கி சாலை பிரிப்பானில் மோதியது.
முன் பயணிகள் இருக்கையில் இருந்த உயிரிழந்தவர், கோல க்ராய் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையால் மீட்கப்படும் வரை இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்டவரின் கணவர், ஓட்டுநருக்கு மார்பில் காயம் ஏற்பட்டது. பின் இருக்கையில் இருந்த அவர்களின் மகளுக்கு காலில் காயம் ஏற்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.
சாலையின் நடுவில் இருந்த மாட்டின் சடலத்தை தவிர்க்க முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக மஸ்லான் கூறினார். பாதிக்கப்பட்ட அனைவரும் மேல் சிகிச்சைக்காக சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். கோல க்ராயில் இந்த பகுதி உட்பட எட்டு விபத்து அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வாகனமோட்டிகளுக்கு விதிகள் மற்றும் வேக வரம்புகளை கடைபிடிக்க நினைவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மஸ்லான் குறிப்பிட்டார்.











