அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சித் தேர்தலில் பெர்சத்து உதவித் தலைவர் பதவிக்கு ஆறு முனைப் போட்டி நிலவுகிறது. தற்போதைய உதவித் தலைவர்களான பெலூரான் நாடாளுமன்ற உறுப்பினர் ரொனால்ட் கியாண்டி, புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ரட்ஸி ஜிடின் ஆகியோர் தங்கள் பதவிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், துணைத் தலைவர் அஹ்மத் பைசல் அசுமுவும் அந்த இடத்திற்கு போட்டியிடுவார்.
மற்ற மூவர் சிலாங்கூர் பெர்சத்து துணைத் தலைவர் ரஃபிக் அப்துல்லா; பெர்சத்து தகவல் தலைவர் ரசாலி இட்ரிஸ்; பத்து கவான் பெர்சத்து தலைவர் அசிஸ் ஜைனல் அபிடின் ஆகியோர் ஆவர். இதற்கிடையில் வனிதா பெர்சத்து துணைத் தலைவர் மாஸ் எர்மியாட்டி சம்சுடின் போட்டியின்றி பதவியை வென்றதையடுத்து, பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். நேற்று, ரீனா ஹருன் பெண்கள் பிரிவின் தலைவராக தனது பதவியை பாதுகாக்கவில்லை என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.










