சாலையை கடக்கும் போது கார் மோதியதில் பதின்ம வயதினர் பலி

அலோர் காஜா: ஜாலான் லெண்டு டாலத்தை கடக்கும்போது, ​​கார் மோதியதில், பதின்ம வயதினர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இரவு 7.15 மணியளவில் நடந்த இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ராட்ஜின் முஸ்லிமின் 13, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர்  அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், கார் மோதியதற்கு முன், பாதிக்கப்பட்டவர் திடீரென சாலையைக் கடந்தது தெரியவந்தது. 29 வயதான ஓட்டுநர் லெண்டுவில் இருந்து ரெம்பியா நோக்கிச் சென்று கொண்டிருந்தார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். உடல் அலோர் காஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அஷாரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here