கோலாலம்பூர்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு மொத்தம் 324 பணியிட மரணங்கள் பதிவாகியுள்ளன என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.
இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 38,950 பணியிட விபத்துகளில் இருந்து இந்த புள்ளிவிவரங்கள் பெறப்பட்டதாக அவர் கூறினார்.
“கடந்த ஆண்டு மலேசியாவில் தொழில்சார் இடங்களில் ஏற்பட்ட காயம் விகிதம் 1,000 தொழிலாளர்களுக்கு 2.46 ஆக இருந்தது, அதே நேரத்தில் அபாயகரமான தொழில் செய்பவர்களின் காயம் விகிதம் 100,000 தொழிலாளர்களுக்கு 2.05 ஆக இருந்தது என்றும், இந்த எண்ணிக்கை குறைவடைந்ததற்கு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார மாஸ்டர் பிளான் 2021-2025 மிகுந்த பங்காற்றியுள்ளது என்றார்.
“2023 இல் காயம் ஏற்பட்ட விகிதம் 1,000 தொழிலாளர்களுக்கு 2.46 ஆக இருந்தது, இது 2013 இல் 1,000 தொழிலாளர்களுக்கு 3.28 ஆக இருந்தது. இதற்கிடையில், அபாயகரமான தொழில் காயங்கள் 56 சதவிகிதம் குறைந்துள்ளது, 2013 இல் 100,000 தொழிலாளர்களுக்கு 4.62 ஆக இருந்த எண்ணிக்கை, 2023 இல் 100,000 தொழிலாளர்களுக்கு 2.05 ஆக குறைவடைந்து.
2023 தேசிய தொழில்சார் காயங்கள் மற்றும் நோய் புள்ளிவிவர அறிக்கையின்படி, அந்த ஆண்டில் தொழில் காயங்கள் மற்றும் இறப்பு விகிதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் இது 24 சதவீதம் குறைந்துள்ளது என்றார்.









