ஜோகூர் பாரு: ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சிக்கி 61 வயதான நியூசிலாந்து பிரஜை 216,000 ரிங்கிட்டை இழந்தார். வட ஜோகூர் பாரு OCPD உதவி ஆணையர் பல்வீர் சிங், பாதிக்கப்பட்டவர் வியாழக்கிழமை (நவம்பர் 28) காவல்துறையில் புகார் அளித்தார். இந்த சம்பவம் இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கியது என்று பகிர்ந்து கொண்டார்.
011-68620057 என்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி மைக்கேல் வோங் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர் பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொண்டார். https://m.worldcoinkk.com என்ற இணையதளத்தின் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட திட்டத்தில் முதலீடு செய்ய பாதிக்கப்பட்டவரை வோங் வற்புறுத்தினார். இந்தத் திட்டம் முதலீடு செய்யப்பட்ட தொகையில் 3% முதல் 5% வரை லாபகரமான மாதாந்திர வருவாயை உறுதியளிக்கிறது என்று அவர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) ஒரு அறிக்கையில் கூறினார்.
இந்த வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர் அக்டோபர் 3 முதல் அக்டோபர் 25 வரை மொத்தம் 27 ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்தார். SPB இன்டர்நேஷனல் சென். பெர்ஹாட்டின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 216,000 ரிங்கிட்டை பரிமாற்றம் செய்தார்.
இருப்பினும், வோங் கூடுதல் தொகையை கோரியபோது, பாதிக்கப்பட்டவர் மறுத்துவிட்டார். மேலும் முதலீட்டிலிருந்து எந்த வருமானமும் பெறாததால் அவர் மோசடி செய்யப்பட்டதை விரைவில் உணர்ந்தார். இழந்த தொகையானது பாதிக்கப்பட்டவர் தான் சம்பாதித்த வாழ்நாள் சேமிப்பை இழந்துள்ளார் என்று மேலும் கூறினார். மோசடி செய்ததற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் விதிக்கப்படும்.










